Last 10 days of Ramazan by Mufti Meink
அபு அம்மாராஹ்ஐம்பெரும் கடமைகள்கட்டுரைகேட்டதில் பிடித்ததுபொது ஆக்கங்கள்

Football Extra Time – நோன்பின் கடைசி நாட்கள் (கேட்டதில் பிடித்தது)

அஸ்ஸலாமு அலைக்கும்,

Mufti Menk ஆடியோவிலிருந்து….

ஒரு Football Match ஐ எடுத்துக் கொள்ளுங்கள். முதல் 45 நிமிடத்தில் Match சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் நன்றாகவே போராடிகிறது. இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஆம் இரண்டு அணிகளும் சம நிலையில் இருக்கும்போது, இரண்டாம் பாதி 45 நிமிடம் மிகவும் பரபரப்பாக மாறுகிறது. இரண்டு அணிகளும் கடுமையாக போராடுகிறது. ஒவ்வொரு தருணத்தையும் தவற விடாமல் விளையாடுகிறது. அதிலும் இரு அணிகளும் சமமாக இருக்கும்போது extra time கொடுக்கப்பட்டால், சொல்லவே வேண்டியதில்லை, எதிர் பாராத முயற்சியும் போராட்டமும்.

ஆம், ரமலானின் முதல் பகுதி முழுமையான திருப்தி தராத நிலையில் சாதாரணமக பலருக்கும் சென்று விட்டது. சில நொடிகளில் பறந்து விட்டது. இன்னொரு பகுதி உண்டு. அதில் இப்போது நாம். முண்டியடித்து போட்டி போட்டி இன்னும் விறுவிறுப்பாக அமல் செய்ய வேண்டிய நேரம். செய்கிறோமா? சிந்தித்து வேகமாக செயல் பட வேண்டிய தருணம்.

அதேபோல்… 29 நோன்பில், நமக்கு 30 நோன்பு, நாளை பெருனாள் இல்லை நோன்பு தான் என்று அறிவிப்பு வந்தால் ஒரே எரிச்சல். ஆனால் அந்த Football match extra time போல, நாம் சிந்தித்தால்.. அந்த ஒரு நாள், ஒவ்வொரு அமலுக்கும் பல மடங்கு நன்மைகளை கொள்ளையடிக்க கிடைத்த வாய்ப்பு. மற்றொரு இரவு வணக்கம். இன்னொரு இப்தார்……. இன்னும் பல. ஆனால் நாம் எப்படி சிந்திக்கிறோம் என ஒரு கேள்வியை எழுப்பினார்.

சிந்திப்போம். வேகமாக செயல்படுவோம். இன்னும் சில நாட்கள், நன்மைகளில் முந்துவோம்….

தமிழில்
அபு அம்மாராஹ் (முஹம்மது ஸாதிக்)

டாடி சாக்லேட் – என்சம்பாத்தியம் (கேட்டதில் பிடித்தது)

Previous article

ஸுஜூத் அஸ் ஸுகூர்.

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *