அபு அம்மாராஹ்ஐம்பெரும் கடமைகள்கட்டுரைகேட்டதில் பிடித்ததுபொது ஆக்கங்கள்

ஷவ்வால் நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்மையில் Sheikh Muiz Bukhary அவர்களின் ஜும்மாஹ் பயானை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

பினவரும் ஹதீஸை மிக எளிய வழியில் விளக்கினார்.

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

அதாவது, அல்லாஹ்விடத்தில் நாம் நல்ல நிய்யத்துடன் செய்யும் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. இந்த அடிப்படையில் ரமளான் ஒரு மாத நோன்பிற்கு பத்து மாத கூலியும், ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நாட்கள் (அதாவது 2 மாதம்) நோன்பு பிடித்த நன்மைகளும் கிடைக்கும். ஆக 30 + 6 நாட்கள் நோன்பு பிடிக்க நமக்கு ஒரு வருடம் நோன்பு பிடித்த கூலி மொத்தமாக கிடைக்கிறது என மிக எளிய வழியில் கூறினார்
அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவருக்குன் இப்பாக்கியத்தை தருவானாக.

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
(முஹம்ம்து ஸாதிக்)

கற்பனை… ஆனால் நிஜம்.type

Previous article

மகளின் கெஞ்சலும் தந்தை பாசமும்..

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *