அபு அம்மாராஹ்கட்டுரை

இரு உள்ளங்கள்….

இரு உள்ளங்கள்….

முஹம்மத், அஹமத், அந்த இருவரும், மிக அருமையான தனி மனிதர்கள். நல்ல பல சமூக பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாழ்ந்து வருபவர்கள். அழகிய குணம் உடையவர்கள்.

அண்மையில் துரதிஷ்தவசமாக, இந்த Facebook மூலம் ஒரு சிறு பிரச்சினை பெரிய பிரச்சினையாகி, அதற்கு ஏற்றார்போல ஒரு சிலர் இரு பக்கமும் like உம் comment உம் போட்டு இன்று இரு துருவங்களாக நிற்கின்றனர். இருவரும் மிக அழகிய குணம் உடையவர்கள். ஆனால் சைத்தானின் ஊசலாட்டத்தில் இவர்கள், தோற்றுத்தான் போனார்கள். இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தாலே அவர்களுக்குள் கடுமையான மன உளைச்சல்.

அன்று எட்டாம் நோன்பு. அந்த பாவ மன்னிப்பின் மாதத்தில், திடீரென்று, முஹம்மத் மனதில் ஒரு எண்ணம். சட்டையை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினான். தன் பயணத்தை தடுக்கும் பல நிகழ்வுகள். அசரவில்லை, வேகமான நடை. சரியாக அஹமத் வீட்டின் கதவை தட்டினான். திறந்தது அஹமத். எதிர்பார்க்காத அவனுக்கு, கடுமையான கோபம். ஆத்திரம் உச்சத்திற்கு சென்றது. அந்த கணம், முஹம்மத் உள்ளே வரலாமா என கேட்க, விருப்பமில்லாமல் உள்ளே அழைத்தான்.

முஹம்மதின் சில வரிகள்…

எல்லா தப்புகளும், என்னதாகவே இருக்கட்டும். அத்தனைக்கும் மிகவும் வெட்கப்படுகிறேன். எதையும் மீண்டும் தோண்டிப் பார்க்க வேண்டாம். இந்த ரமழான் மாதத்தில் என் தவறுகளை மன்னித்து, அல்லாஹ்வுக்காக என்னை பொருந்திக் கொள், என்று கூற, அஹம்துக்கு சில துளி கண்ணீர் வந்து விட்டது. சரி வருகிறேன் என வெளியே வர, வாயடைத்து நின்றான் அஹமத். தனக்குள் இருந்த மன்னிக்காத தன்மையும், சகிப்புத்தன்மையின்மையும், அப்போது உள்ளத்தை உறுத்தியது.

இன்னொரு புறம், ஒரு அளவிலா மகிழ்ச்சியும், தன் தலையில் இருந்து மிகப் பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வும், மன நிம்மதியும் முஹம்மதுக்கு. இதுதான் விட்டுக் கொடுக்கும் தன்மை, மன்னிப்பின் அருமையோ…. ஒரு வருட சண்டை ஒரு நிமிடத்தில் கரைந்தது.

வீட்டிற்குள் திரும்பி வரும்போது, ஏதும் அறியாத மனைவி கேட்ட முதல் வார்த்தை.. என்னங்க, உங்க முகம் ரொம்ப பிரெஷ்ஷா இருக்கு. அதுவுன் ஒரு பக்கமா சிரிச்சிட்டே வர்ரீங்க, என்னாச்சு? என்பதுதான்.

அன்றிலிருந்து அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். (இப்போது அவர்கள் குழந்தைகள், இலேசாக முட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஹா ஹா)

ரமழான் உறவுகளை புதுப்பிக்கும் மாதம். பகைமைகளை தூர எறியும் மாதம். நீங்களும் நீண்ட கால பகைமைகளை முறித்து நட்பை பேணத் தயாரா?

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
முஹம்மது சாதிக்

 

ஸுஜூத் அஸ் ஸுகூர்.

Previous article

கடன் அட்டைகள். (Credit Cards)

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *